தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய திறப்பு விழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு

.தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.58.67 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள அண்ணா பழைய பஸ் நிலையம், அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.28.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதப்பூங்கா மற்றும் நகர்சார் மையத்தினையும் மநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என .நேரு திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அரசு விழாவில் பல்வேறு துறைகளில் சார்பில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 282 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இந்த விழாவுக்கு கனிமொழி எம்.பி.தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் நேரு பேசும்போது, “திமுக ஆட்சி அமைந்து பின்புதான் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி என அனைத்து பகுதிகளுக்கும் முறையாக எனது துறைக்கு ஓதுக்கப்பட்ட நிதியை பிரித்து கொடுத்து தமிழகம் முழுவதும் பணிகள் நடைபெறுகிறது. இந்த ஆட்சியின் சாதனை தொடர்ந்து நடைபெற அனைவரும் ஓத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.87.01 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 4 சிப்பங்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.274.50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்டத்தில் இடங்களில் நியாயவிலைக்கடை கட்டிடம், பயணியர் நிழற்குடை கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்தல், கலையரங்கக் கட்டிடம், அங்கன்வாடி மையக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கும் மேலும், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் ரூ.189 லட்சம் மதிப்பீட்டில் கழுகுமலை சார்பதிவாளர் அலுவலக் கட்டடம் கட்டுவதற்கும், ரூ.184.15 லட்சம் மதிப்பீட்டில் எட்டையபுரம் சார்பதிவாளர் அலுவலக் கட்டடம் கட்டுவதற்கும், ரூ.190 இலட்சம் மதிப்பீட்டில் கயத்தாறு சார்பதிவாளர் அலுவலக் கட்டடம் கட்டுவதற்கும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்தை கூடுதல் உட்;கட்டமைப்பு வசதியுடன் நவீனப்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
கோவில்பட்டி நகராட்சியில் வார்டு எண் 4 சங்கலிங்கபுரம் மற்றும் வார்டு எண்: 30 அறிஞர் அண்ணா நகர் பகுதி ஆகிய இடங்களில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். கோவில்பட்டி நகராட்சியில் பணிபுரியும் 114 தூய்மைப் பணியாளர்களுக்கு மழைநீர் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட தூய்மை பணிகளுக்கான உபகரணங்களையும், பேரூராட்சிகளில் பணிபுரியும் 70 தூய்மைப் பணியாளர்களுக்கு மழைநீர் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட தூய்மை பணிகளுக்கான உபகரணங்களையும், மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 98 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.8 கோடி வங்கிக்கடனுதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்..
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் ‘தூய்மையான சாலையோர உணவு மையம்” என்று கோவில்பட்டி பேருந்து நிலையத்திற்கு வழங்கப்படும் சான்றிதழை கோவில்பட்டி நகராட்சி ஆணையாளருக்கு வழங்கினார்.
மார்க்கன்டேயன் எம்.எல்..ஏ., , கலெக்டர் செந்தில்ராஜு, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைமேயர் ஜெனிட்டா, ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
.விழாவில் நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, சப்கலெக்டர் கவுரவ்குமார், பயிற்சி கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், , மாநகராட்சி இணை ஆணையர் ராஜாராம், செயற்பொறியாளார் பாஸ்கர், தாசில்தார் பிரபாகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், மாவட்ட உணவு பொருள் தரக்கட்டுபாட்டு அலுவலர் டாக்டர் மாரியப்பன், மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் வீரபுத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
