கோவில்பட்டியில் 128 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்; கனிமொழி எம். பி. வழங்கினார்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை தாங்கினார்.. தூத்துக்குடி மேயர் பெ.ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, 128 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.

கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள்,மற்றும் மாவட்ட, நகர பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
