• June 7, 2025

கோவில்பட்டியில் பா. ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 

 கோவில்பட்டியில் பா. ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா. ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில், வடக்கு மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி முன்னிலையில் கோவில்பட்டி யில் நகர,ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் 2024 தேர்தலுக்கு எல்லாரும் ஒற்றுமையுடன் நல்ல முறையில் செயல்பட்டு தாமரையை மலர செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

கிளைகளில் பூத் கமிட்டி போடாதவர்கள் கட்டாயம் உடனடியாக போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பல ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

 பா. ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர்கள் வேல் ராஜா, கிஷோர், சரவண கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ‘என் மண் என் மக்கள்” நிகழ்ச்சி பற்றி விரிவுரையாற்றினார்கள் அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்,வர்த்தக பிரிவு மாநில செயலாளர் அசோக் குமார், தொழில் பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீனிவாச ராகவன் சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஜீவா கண்ணன்,அமைப்புச் சாரா மாநிலச் செயலாளர் கோவிந்தன், நகரத் தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜ்குமார், முத்துமாரி, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து,மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் மற்றும் லீலாவதி மற்றும் மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *