கோவில்பட்டி போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

நாலாட்டின்புதூர் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் மற்றும் 6 கண்ணக்களவு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஒருவர் ஆகிய 4 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த ரூபாய் 6,85,000/- மதிப்பிலான 17 பவுன் தங்க நகைகள் மற்றும் வீடியோ கேமரா ஆகியவற்றை மீட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர். வனசுந்தர், உதவி ஆய்வாளர் காந்தி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில், கயத்தாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலை முதல் நிலை காவலர். சுரேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இந்த சான்றிதழை வழங்கினார். அப்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
