அ.தி.மு.க. பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் 32,33வது வார்டு மற்றும் புது கிராமம் பகுதியில் உள்ள பூத்துக்கான முகவர்கள் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், கிளைச் செயலாளர்கள் மகேஷ் பாலா, சரவணன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மகளிர் அணி பத்மாவதி,கோமதி அ.தி.மு.க. நிர்வாகிகள் கடம்பூர் விஜி, கடம்பூர் மாயா துரை, கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
