உலக ஓசோன் தின கண்காட்சி; பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பாட்டிலில் விதை ஊன்றிய மாணவர்கள்

நாடு முழுவதும் செப்-16ம் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்,ஓசோன் படலம் பாதுகாப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைபடை சார்பில் உலக ஓசோன் தின விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியினபோது பள்ளி மாணவர்கள், பயன்படுத்த முடியாத தண்ணீர் பாட்டிலில் மணல் நிரப்பி வெண்டை விதைகளை ஊன்றினர் .ஓசோன் விழிப்புணர்வு குறித்த படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.ஓவிய போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதா தலைமை தாங்கினார்.அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி பசுமை இயக்க தலைவர் ஜெகஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக ஓசோன் தின விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, ஆசிரியர்கள் அபிலா திரேஷ் ,செல்லம்மாள்,சுப்புலட்சுமி,உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.
