• June 8, 2025

கி .ராஜநாராயணன் 101வது பிறந்தநாள் விழா; வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திட அரசு பள்ளி மாணவிகள் உறுதியேற்பு

 கி .ராஜநாராயணன் 101வது பிறந்தநாள் விழா; வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திட அரசு பள்ளி மாணவிகள் உறுதியேற்பு

கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 101வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள நினைவரங்கத்தில் உள்ள கி.ராஜநாராயணன் உருவசிலைக்கு அரசு மகளிர் பள்ளி மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர்  வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி பொது அறிவையும்,கலைத்திறமையும் வளர்த்துக் கொள்ளவும்,வாசிப்பு பழக்கம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,விருப்பமான துறைகளை தேர்வு செய்து சாதனை புரியவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து மாணவிகள் அனைவரும் கி.ராஜநாராயணனின் நினைவரங்கத்தை பார்வையிட்டனர்.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன்,ஆசிரியர்கள் கவிதா,விஜயலட்சுமி, சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *