கோவில்பட்டியில் முப்பெரும் விழா

பாண்டியனார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கோவில்பட்டி சவுபாக்யா திருமண மண்டபத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. புது நம்பிக்கை அறக்கட்டளை தொடக்கவிழா, சமூநீதிக் காவலர் சவுந்திரபாண்டியனார் பிறந்தநாள் விழா மற்றும் சமூக சேவகர்களுக்கான விருதுகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.
பாண்டியனார் மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சீனிராஜ் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் திலகரத்தினம், அந்தோணி பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
முனைவர் கருத்தப்பாண்டி, கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகி முனைவர். சம்பத்குமார், தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மருத்துவ சேவைக்காக தொழிலதிபர் திலகரத்தினம், சமூக சேவைக்காக கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், குருதிக்கொடைக்காக பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் காளிதாஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
வேல்முருகன் வரவேற்று பேசினார், விக்னேஷ் கார்த்திக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மற்றும் ஜோயல் நன்றி கூறினார்.
விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
