மகாகவி தினம்: இந்திய வரைபடத்தில் பாரதியார் படம் வரைந்து மாணவிகள் அசத்தல்

நாட்டின் விடுதலைக்கு தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய முண்டாசு கவிஞன் மகாகவி பாரதிக்கு புகழ்சேர்க்க செப்டம்பர் 11ம் தேதி மகாகவி தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, கொண்டையராஜு ஓவிய பயிற்சி பள்ளி ஆகியவை சார்பில் நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மகாகவி தினம் இன்று கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் இந்திய வரைபடத்தில் பாரதியார் படம் வரைந்து அசத்திய மாணவிகள் 102 அகல்விளக்கேற்றி மரியாதை செய்தனர்.
பின்பு பாரதியின் புகழை பரப்பிடவும்,பாரதி கண்ட கனவை நிறைவேற்றிடவும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும்உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கொண்டையராஜீ ஓவிய பயிற்சி பள்ளிநிர்வாகி முருக பூபதி, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி மாணவர்கள் பாரதி படம் வரைந்து அகல் விளக்கேற்றி பாரதியின் பாடல்களை பாடினர். முடிவில் ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.
