66-வது நினைவு நாள்: இமானுவேல் சேகரனார் சிலைக்கு தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரனார் 66-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. கோ வில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் சிலைக்கு கோவில்பட்டி ஒன்றிய, நகர தி.மு.க.சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி நகர திமுக செயலாளரும் நகராட்சி தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,, மாவட்ட விவசாய அணி அமைபாளர் சந்தனம், பொதுகுழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் தங்க மாரியம்மாள், அரசு வக்கீல் ராமசந்திரன் உள்பட ஏராளமானவர்கள் , சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தெற்கு திட்டங்குளத்தில் இமானுவேல் சேகரனார் உருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் sc/st பிரிவு மாவட்ட தலைவர் கண்ணாயிரம் முத்து தலைமையில் நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் sc/st பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாவட்ட செயலாளர் ஜோஷ்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்
