ஜமீன் தேவர் குளத்தில் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் ஜமீன் தேவர்குளம் கிராமத்தில் இன்று (9.8.23) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் .கி.செந்தில்ராஜ் கலந்து கொண்டார். அவர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த அரங்குகளை கலெக்டர் .கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
மேலும் அரங்குகளை பார்வையிட வந்திருந்த மக்களிடம் அதிகாரிகள் அரசின் திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.
