• June 7, 2025

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை

 கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை

இந்திய சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன,

முக்கியமாக துறைமுகம், ரெயில் நிலையங்கள், அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இன்று காலை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக  மதுரை டிவிசன் வெடிகுண்டு  பிரிவு உதவி ஆயவாளர் ஜெயக்குமார் மற்றும் கோவில்பட்டி ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சந்திரன், எட்டு சங்கரலிங்கம் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகள் வைத்திருந்த உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டன. ரெயில்வே ரிசர்வேஷன் பகுதி மற்றும் நடைமேடைகளில் இருந்த பயணிகளிடம் இந்த சோதனை நடந்தது.ரெயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை தொடர்ந்து நடக்கும் என்றும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *