தூத்துக்குடி, தென்காசி மண்டல விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிய செயலாளர்கள் அறிமுக கூட்டம்

தூத்துக்குடி, தென்காசி மண்டல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தூத்துக்குடி மற்றும் தென்காசி மண்டல செயலாளர்கள் மற்றும் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிமுக கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது.
இந்நிகழ்வில் கூட்டத்திற்கு மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார்.மண்டல துணை செயலாளர்கள்
சித்திக், மோட்சம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள்
சு முருகன் – தூத்துக்குடி வடக்கு மாவட்டம்.
கணேசன்- தூத்துக்குடி மைய மாவட்டம்.
லிங்க வளவன் -தென்காசி வடக்கு மாவட்டம்,
ஜான் தாமஸ்- தென்காசி மேற்கு மாவட்டம்,
செல்வம் -தென்காசி தெற்கு மாவட்டம்,
வசந்தகுமார் -தென்காசி கிழக்கு மாவட்டம்
ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்,

இந்நிகழ்ச்சியில் கட்சியின்
முன்னாள் மண்டல செயலாளர் தமிழ் இனியன் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் கலைவேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
,கோவில்பட்டி நகர கழக செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,
சமூக ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன்,
வழக்கறிஞர் பாபு,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்டர் மோகன்,
மகளிரணி மாவட்ட அமைப்பாளர் விஜயா அந்தோணி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன்
மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
[ஆகஸ்ட் 13 அன்று தூத்துக்குடி தென்காசி மண்டல பகுதியில் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் கழகத்திற்கு பொறுப்பேற்று பாஜக மாநில அரசும் பிரதமர் மோடியும் பதவி விலக கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தென்காசி ஆலங்குளம் கடையநல்லூர் சங்கரன்கோவில் கோவில்பட்டி தூத்துக்குடி திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 17 திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தூத்துக்குடி தென்காசி மண்டல பகுதிகளில் அனைத்து ஒன்றியங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம், அரசு மருத்துவமனைகளில் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல், ரத்ததானம் செய்தல், பனை விதை மரக்கன்றுநடுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் தூத்துக்குடி தென்காசி ஆகிய மண்டல ஒன்றிய பகுதிகளில் 60, அடி கோடி கம்பங்கள் நடும் விழா நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
