• June 7, 2025

சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர்; மாநகர மேயரை கரிசல் இலக்கிய அமைப்பினர் சந்தித்து  நன்றி

 சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர்; மாநகர மேயரை கரிசல் இலக்கிய அமைப்பினர் சந்தித்து  நன்றி

திருநெல்வேலி டவுண் முதல் குறுக்குத்துறை செல்லும் சாலைக்கு  நெல்லை கண்ணன் பெயரை சூட்டுவதாக நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளனர்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவில்பட்டியை சேர்ந்த கரிசல் இலக்கிய அமைப்பின் நிறுவனர் கே.பி.ராஜகோபால், தலைவர் ஆர்.ஜே. மணிகண்டன், சட்ட ஆலோசகர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மாநகர மேயர் சரவணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 16 ம் தேதி நெல்லை கண்ணன் பெயரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் கட்டிடம் அல்லது சாலை என ஏதேனும் ஒரு பணிக்கு அவரது  பெயர் சூட்டி கவுரவிக்க வேண்டும் என்று  கரிசல் இலக்கிய அமைப்பினர் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *