தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று 4 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது

தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு மைசூர் புறப்பட்டு செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(செவ்வாய்கிழமை) தூத்துக்குடியில் இருந்து 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ள்ளது.
இணை ரெயில் தாமதமான காரணத்தால் தூத்துக்குடி-மைசூர் விரைவு ரெயில்(16235) மாலை 5.15 மணிக்கு பதிலாக இரவு 9.15 மணிக்கு மைசூர் புறப்படும். பயணிகள் இதற்கு ஏற்றவாறு பயணத்தை ஏற்பாடு செய்து கொள்ளும்படி ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது,
