தி.மு.க.அரசை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் திட்டங்களை முறையாக மக்களுக்கு நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், அனைத்து அரசு துறைகளிலும் உள்ள ஊழல்களை கண்டித்தும் பா..ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி நகரம் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் பல்வேறு இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பசுவந்தனை ரோடு நாடார் மெட்ரிக்குலேசன் பள்ளி எதிர்புறம் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமைதாங்கினார். பொதுசெயலாளர் வசந்தராசு, சந்தானம், மாநில செயலாளர்கள் சிவந்தி நாராயணன், மோகன்தாஸ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்,
மேலும் மற்றும் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே தேவர் சிலை முன்பு, மணியாச்சி பைபாஸ் சாலை கும்பகோணம் காபி பார் அருகில் மற்றும் அனைத்து பஞ்சாயத்துகளிலும், நகராட்சி வார்டுகளிலும் கிளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திட்டங்குளம் தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு திட்டங்குளம் வெங்கடேஷ், பெருமாள், கிழக்கு ஒன்றியம் அய்யாதுரை பாண்டியன் , கிளை தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
