• June 8, 2025

அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் விநாயகர் கோவில் வருடாபிஷேக விழா; செப்டம்பர் 2-ந் தேதி நடக்கிறது

 அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் விநாயகர் கோவில் வருடாபிஷேக விழா; செப்டம்பர் 2-ந் தேதி நடக்கிறது

கோவில்பட்டி அப்பனேரி  வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் ஸ்ரீ விக்ன விநாயகர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழா செப்டம்பர் 2-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமதத்துடன் விழா தொடங்குகிறது. காலை 7.45  மணிக்கு மேல் 8.45 மணிக்குள் விக்ன விநாயகருக்கு வருடாபிஷேகம், அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

பகல் 11 மணி முதல்  மதியம் 2 மணிவரை மகா அன்னதானம் நடைபெற இருக்கிறது.

மேலும் செப்டம்பர் 18 ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி திதியை முன்னிட்டு காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. அன்று காலை 9.15  மணிக்கு மேல் 10.15 மணிக்குள் விக்ன விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்.

விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *