கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஒத்திவைக்கப்பட்ட மின்தடை நாளை அமல்

கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதாவது
8 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் கடந்த 18-ந்தேதி காலை 8 முதல் மாலை 5 மணி
வரை மின்சப்ளை இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் கோவில்பட்டி செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து அறிவித்து இருந்தார்.
பின்னர் நிர்வாக காரணங்களுக்காக மின் தடை ரத்து செய்யப்பட்டு மின்சப்ளை வழக்கம் போல் இருக்கும் என்றும் மின் தடை செய்யப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் செயற்பொறியாளர் காளிமுத்து அறிவித்து இருந்தார்.
அதன்படி அன்றைய தினம் .மின்சப்ளை வழக்கம் போல் இருந்தது. ஒத்திவைக்கப்பட்ட மின்தடை 20-ந்தேதி (வியாழக்கிழமை)அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை வியாழக்கிழமை கோவில்பட்டி உள்பட 8 துணை நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்திகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
