• June 8, 2025

இலுப்பையூரணியில் பயணியர் நிழற்குடைகள் அமைக்க அடிக்கல்

 இலுப்பையூரணியில் பயணியர் நிழற்குடைகள் அமைக்க அடிக்கல்

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யின்  பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் – இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சண்முகா நகர் மற்றும் வடக்கு இலுப்பையூரணியில் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்படுகின்றன.

இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இரண்டு இடங்களிலும் தனித்தனியாக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அமைச்சரும் தூத்துக்குடிவடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார். கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன் மற்றும் கட்சி  நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வடக்கு இலுப்பையூரணியில் இருந்து நகராட்சி எல்லை கருப்பசாமி கோவில் வரை முதலமைச்சரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 48.36 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்திடும் பணியை அமைச்சர். கீதாஜீவன் தொடக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மத்திய ஒன்றிய செயலாளர். முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *