நாடார் நடுநிலைப்பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில் 75வது தமிழ் மன்றம் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கவிதை, கட்டுரை, பேச்சு .விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் புத்தகம் பரிசும் வழங்கப்பட்டது.பிறந்தநாள் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி பாராட்டப்பட்டது.
தமிழ் மன்ற கூட்டத்திற்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் பத்மாவதி, ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராதா, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.
தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளர் மற்றும் தமிழ் செம்மல் விருதாளர் நெல்லை பொதிகை தமிழ் சங்க தலைவர் கவிஞர் பேரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பிறந்தநாள் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி குழு உறுப்பினர் ராஜா அமரேந்திரன், ஆசிரியர்கள் அருள் காந்தராஜ், முத்துச்செல்வி, சங்கரேஸ்வரி, ஜெயலட்சுமி, சங்கரா கிட்ஸ் வித்யாலயா முதல்வர் மீனா, உள்பட பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் ஆசிரியர் விஜய பொன் ராணி நன்றி கூறினார்.
