• June 8, 2025

மகளிர் உரிமைத் திட்டம்: வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை

 மகளிர் உரிமைத் திட்டம்: வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான பணிக்குழு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்; நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் மாவட்ட ஆட்சியரால்  தெரிவிக்கப்பட்டது.

* 21 வயது நிரம்பிய குடும்பத்தலைவிகளிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தினைப் பெற்று எவ்வாறு மொபைல்ஆப் மூலமாக, பயோமெட்ரிக் கருவி மூலம் எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டது.

*கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளியாகிட பொருளாதாரத் தகுதியான நபர்களாக கீழ்க்கண்ட குடும்பங்கள் உள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் மற்றும் ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

*இப்பணியினை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய மாவட்ட அளவிலான குழுக்கள் மற்றும் வட்ட அளவிலான குழுக்கள் அமைத்து மாவட்ட ஆட்சியரால் உத்திரவிடப்பட்டுள்ளது.

*மாவட்டத்திலுள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே உரிய விண்ணப்பப்பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன்னரே நேரடியாக குடும்ப அட்டைதாரர்கள் வீட்டிற்கே சென்று அந்த ரேசன் கடை விற்பனையாளர் விண்ணப்பம் பதிவு செய்ய முகாமிற்கு வர வேண்டிய நாள், நேரம் மற்றும் குடும்ப அட்டை எண்ணை அந்த விண்ணப்பத்தில் பதிவு செய்து வழங்குவார்.

*கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஒளிநகல் எடுத்து பயன்படுத்துதல் கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒரு நபர் பல விண்ணப்பங்களை கொண்டு வந்து முகாமில் பதிவு செய்ய இயலாது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தினை அந்த குடும்பத் தலைவியே அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகாமில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகியவற்றுடன் சமர்ப்பித்து கைவிரல் ரேகை பதிவுகள் மூலம் பதிவுகள் செய்திட வேண்டும்.

*ஒவ்வொரு விண்ணப்பப்பதிவு முகாமில் ஒரு பொறுப்பு அலுவலர், விண்ணப்ப பதிவு தன்னார்வலர் பணியில் இருப்பார்கள். மேலும் முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆவணங்கள் சரிபார்த்து வழங்கிட ஒரு உதவி மைய தன்னார்வலரும் பணியிலிருப்பார். மேற்படி முகாம்களை மண்டல அலுவலர்கள், மேற்பார்வை அலுவலர்கள் தினமும் பார்வையிட்டு பொதுமக்கள் எளிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை உறுதி செய்வார்கள். விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வரும் பொதுமக்கள் எளிதான வகையில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பொருட்டு உரிய வசதிகள் முகாமில் செய்திட அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

*மேற்படி முகாமில் ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை இல்லாத விளிம்பு நிலையில் உள்ள பொதுமக்களில் யாரேனும் வருகை புரிந்தால் அவர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து அவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பங்கேற்க வட்டாட்சியர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*முகாம்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் வகையில் தவறான கருத்துக்களை பரப்பி அதன் மூலம் கூட்ட நெரிசல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படின் தவறான தகவல்களை பரப்பிய நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து முகாம்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் தடுப்பு ஏற்பாடுகள் செய்திடும் பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

*கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாள்கள் மற்றும் மேல் விபரங்கள் ஏதேனும் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்

கட்டுப்பாட்டு அறை, தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி 0461-2340601, 0461-2340603

 9486454714

வட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடி 0461-2321448 –

வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீவைகுண்டம் 04630-255229 –

வட்டாட்சியர் அலுவலகம், திருச்செந்தூர் 04639-242229 –

வட்டாட்சியர் அலுவலகம், சாத்தான்குளம் 04639-266235 –

வட்டாட்சியர் அலுவலகம், ஏரல் 04630-270055 –

வட்டாட்சியர் அலுவலகம், கோவில்பட்டி 04632-220272 –

வட்டாட்சியர் அலுவலகம், கயத்தார் 04632-261906 –

வட்டாட்சியர் அலுவலகம், எட்டயபுரம் 04632-271300 –

வட்டாட்சியர் அலுவலகம், விளாத்திகுளம் 04638-233126 –

வட்டாட்சியர் அலுவலகம், ஓட்டப்பிடாரம் 0461-2366233 –

*கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் 12.7.2023, 14.7.2023 மற்றும் 18.7.2023 ஆகிய தினங்களில் வட்ட/வட்டார அளவில் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் வட்டாட்சியர்கள் மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சியாளர்களால் நடத்தப்பட உள்ளது.

*கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம்கள் மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முகாம் நேரம் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் ஞாயிற்று கிழமைகளிலும் முகாம் நடைபெறும். இந்த முகாம் நடைபெறும் நாள்கள் மற்றும் இடங்கள் குறித்து விரிவான விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *