கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள விநாயகர், முத்துமாரியம்மன், கருப்பசாமி, கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் சுவாமிக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மஹா கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம். எல் . ஏ.கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயக ரமேஷ், அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, நகர அவைத் தலைவர் அப்பாசாமி,

ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், அதிமுக நிர்வாகிகள் வெள்ளைச்சாமி அழகர்சாமி, வேல்ராஜ், அல்லித்துரை, சிங்கராஜ், மற்றும் கோவில் நிர்வாகிகள் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிசாமி, பொருளாளர் லட்சுமணன், கோயில் உறுப்பினர்கள் முத்துப்பாண்டியண், சீனிவாசன், லியோ செண்பகராஜ், சந்திரசேகர்ன், சீனிவாசன், கணேசன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
