• June 8, 2025

கோவில்பட்டி ஸ்ரீராம் நகர் பகுதியில் புதிய நியாய விலை கடைக்கான கட்டுமான பணி தொடக்கம்

 கோவில்பட்டி ஸ்ரீராம் நகர் பகுதியில் புதிய நியாய விலை கடைக்கான  கட்டுமான பணி தொடக்கம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு ஸ்ரீராம் நகர் 2வது தெருபகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டப்படுகிறது. இந்த பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு புதிய நியாய விலை கடை கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

நகராட்சி செயற்பொறியாளர் சணல்குமார், 31வது நகர்மன்ற உறுப்பினர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. நகர் செயலாளர் விஜய பாண்டியன், ராமச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர் கவியரசு, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *