இந்திய விடுதலை போராட்ட தியாகி வாஞ்சிநாதன் 112வது நினைவு தினம்

இந்திய விடுதலைப்போராட்டத் தியாகி வாஞ்சிநாதன் 112வது நினைவு தினம் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் சார்பாக கோவில்பட்டி காயத்திரி திருமண மண்டபத்தில் கடைபிடிக்கப்பட்டது.
விழாவிற்கு அபிராமி முருகன் தலைமை தாங்கினார், வழக்கறிஞர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
விழாவில் இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலச்செயலாளர் க.தமிழரசன், வழக்கறிஞர் ஜெயஶ்ரீ மற்றும் முனைவர். ஆ.சம்பத்குமார் ஆகியோர் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் காயத்ரி திருமண மண்டப நிர்வாகி ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நிறுவனர் நாஞ்சில் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ஆவல்நத்தம் லட்சுமணன், நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலச்சங்க தலைவர் செண்பகம், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மேரிஷீலா, மாவீரன் பகத்சிங் ரத்ததானக் கழக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், பறையர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தாவீது ராஜா, வழக்கறிஞர் விஜயகுமார், அ.தி.மு.க.ஒன்றிய துணைச்செயலாளர் அவ்வையார் செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வாஞ்சிநாதன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது
