மாவட்ட ஆக்கி போட்டி : பாண்டவர்மங்கலம் அணிக்கு முதல் பரிசு

டாக்டர் அம்பேத்கர் ஆக்கி கழகத்தின் சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி தாமஸ் நகர் ஆக்கி மைதானத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்ட்து.
இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 10 அணிகள் கலந்து கொண்டன.
இறுதி போட்டியில் பாண்டவர்மங்கலம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அம்பேத்கர் அணியை வென்றது.
இரண்டாம் இடத்தை அம்பேத்கர் ஆக்கி கழக அணி பெற்றது.
மூன்றாம் இடத்தை பாரதிநகர் அணியும்,நான்காம் பரிசை கூசாலிபட்டி அணியும் தட்டிச்சென்றன.
போட்டியின் இறுதியில் இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அடியினருக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கினார். விழாவில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, துணைத் தலைவர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடுவர்களாக காளிதாஸ், அஸ்வின், சிவ ஆனந்த், கார்த்திக் ராஜா ஆகியோர் செயல் பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜன் , மாயாண்டி செய்திருந்தனர்
