கோவில்பட்டி மானாவாரி விவசாயிகள் சுயசார்பு நிறுவனத்தின் சார்பில் எண்ணெய் ஆலை தொடக்கம்

கோவில்பட்டி மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி ,லிமிடெட், கடந்த 3.9.2014 அன்று சுயசார்பு நிறுவனமாக கம்பெனி சட்டம் 2013 பிரிவின் கீழ் அங்கீகாரம் பெறப்பட்டது.
இந்த நிறுவனத்தை 5 இயக்குனர்கள் நிர்வாகம் செய்து வருகிறார்கள். கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 224 சிறு விவசாயிகள் மற்றும் 791 பிற விவசாயிகளாக மொத்தம் 1015 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்நிறுவனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட மூலதனமான ரூ.40 லட்சத்துக்கு 35.29 லட்சம் மூலதன பங்குகளாக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. மத்திய அரசின் மூலம் ரூ.10 லட்சம் சம நிதியாக பெறப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்திற்கு சித்திரம்பட்டி கிராமத்தில் சொந்தமான 1.05 ஹெக்டேர் நிலப்பரப்பில் 2 ஆயிரம் சதுர அடியில் பருப்பு ஆலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு வேளாண் மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.15.40 லட்சம் மானியம் பெறப்பட்டுள்ளது
மேலும் TN S FAC- SMSP திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் முழு மானியம் பெறப்பட்டு 4 ஆயிரம் சதுர அடியில் விதை சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது
நீடித்த மானாவாரி வேளாண்மை திட்டத்தின் கீழ் (MSDA) சார்டெக்ஸ் இயந்திரம் ரூ.12.7 லட்சம், எண்ணெய் பிழிதல் இயந்திரம் ரூ.4.70 லட்சம், நிலக்கடலை உடைக்கும் மற்றும் வறுக்கும் கடலை எந்திரம் ரூ.2.60 லட்சம் மானியத்திலும் பெறப்படுள்ளது.
பருப்பு ஆலையின் செயல்பாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி அதிகரித்து வருகிறது. 2019-20 ம் ஆண்டில் பருப்பு உற்பத்தி ரூ.60 லட்சமாக இருந்தது, 2020-21 இல் ரூ,82 லட்சமாக உயர்ந்தது. 2021-22 இல் ரூ. 1 கோடியே 20 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் கோவில்பட்டி சாலைப்புதூர் கே,ஆர்,நகரில் எண்ணெய் ஆலையை இன்று தொடங்கப்பட்டுள்ளது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரித்து நேரடியாக விற்பனை செய்ய இருக்கிறார்கள். மேலும் இங்கு தனியாருக்கு அனைத்து வித எண்ணெய்களும் அரைத்தும் கொடுக்கப்படும்,
எண்ணெய் ஆலை தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இயக்குனர் சாந்திராணி, வேளாண்மை துணை இயக்குனர் முருகப்பன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மார்ட்டின் ராணி, வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் சங்கரநாராயணன், வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் , இயக்குனர்கள் சுப்பாராஜ், நவநீதன், புஷ்பராணி, பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மானாவாரி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்,
