• June 7, 2025

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலைய வியாபாரிகளுக்கு நகராட்சி சந்தையில் முன்னுரிமை வழங்க கோரிக்கை

 கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலைய வியாபாரிகளுக்கு நகராட்சி சந்தையில் முன்னுரிமை வழங்க கோரிக்கை

கோவில்பட்டியில் நகராட்சி மூலம் செயல்பட்டு வந்த தினசரி சந்தை புதுபிக்கப்படுகிறது. இதனால் அங்கு கடைகள் அமைத்திருந்தவர்களுக்கு கூடுதல் பஸ் நிலையத்தில் த்ரகாளிகமாக சந்தை மாற்றப்பட்டு கடைகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் அங்கு கடை அமைக்காமல் திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரத்தை தொடங்கினார்கள்.

உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி கடைகள் அடைக்கும்படி கோட்டாட்சியர் உத்த்ரவிட்டார். இதன்படி அங்கிருந்து கடைகள் அடைக்கப்பட்டு உரிய அனுமதி பெரும் முயற்சியில் வியாபாரிகள் இறங்கினார்கள்.

அதே சமயம் நகராட்சி ஒதுக்கிய கூடுதல் பஸ் நிலையத்துக்கு சென்று கடைகள் அமைக்கவில்லை. கடைகளை மூடிவிட்டு சும்மா இருந்தனர். அந்த சமயத்தில் கூடுதல் பஸ் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்தன. இதற்கு இடையே உரிய அனுமதி பெற்று திட்டங்குளம் மார்க்கெட் கடைகள் திறக்கப்பட்டன, மொத்தம் மாற்றம் சில்லறை காய்கறி கடைகள் திறக்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகின்றன,

நகராட்சி தலைவரை சந்தித்த வியாபாரிகள்

இதை தொடர்ந்து கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து  நிறைய கடைகள் அந்த இடத்துக்கு மாறின. இதனால் இங்கு சில கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன,.

இந்த நிலையில் இங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இன்று நகராட்சி தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்கள். அரசின் உத்தரவின்படி கூடுதல் பஸ் நிலையத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு – நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தையில் முன்னுரிமை அளித்து கடைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்து ஒதுக்கிய தற்காலிக தினசரி சந்தைக்கு எதிராக நடக்கும் தனியார் தினசரி சந்தையை மூட வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *