• June 7, 2025

உளவுத்துறை பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததே சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்கு காரணம்; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 உளவுத்துறை பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததே சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்கு காரணம்; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்தில், 22 -ம் தேதி அ. தி. மு. க. நடத்த உள்ள பேரணி இடம் மாற்றம் குறித்து, முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் இன்று மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு :-

தமிழகத்தில் கள்ளச்சாரயம் பெருகி ஓடி அதன் மூலம் சாதாரண ஏழை,எளிய மக்கள் உயிரை இழந்து,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,அந்த குடும்பம் தலைவரை இழப்பதற்கு திமுக அரசு காரணமாக உள்ளது.
அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடி.அதனை கட்டுபடுத்த தவறியதன் விளைவு,இதுபோன்ற கள்ளச்சாரய மரணங்கள்,சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள்,அரசின் முறைகேடுகள்,போன்வற்றை எல்லாம் தொகுத்து ஒரு மனு ஆளுநரிடம் 22 ம் தேதி காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டை டிப்போவுக்கு பின்புறம் பேரணியாக சென்று சின்னமலை தொடங்கி பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு ஏற்பாடுகள்,காவல்துறை அதற்குரிய அனுமதி தரவேண்டும் என்று கடிதம் அளித்துள்ளோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-
கேள்வி:- செந்தில்பாலாஜி ராஜினாமா செய்யவேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளாரே
பதில் :-தமிழகத்தில் இன்றைக்கு கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது.இதனை கட்டுப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எடப்பாடியார் தெரிவித்ததுபோல முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும்.அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி அதுவும் கழகம் பிரதான கோரிக்கையாக வைத்துள்ளது.
ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போலதான்.பதவி ஆசையில் இவர்கள் ஒட்டிகொண்டிருப்பார்கள்.ராஜினாமா செய்யபோவதில்லை. நேற்றுகூட செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுகிறதே ,அது குறித்து உங்களுக்கு தெரியுமா,நடவடிக்கை எடுத்தீர்களா என்று கேட்டால் அதுபோன்று எங்கும் கிடையாது.
உங்களுடைய ஊடகத்தின் விளம்பரத்திற்காக கேள்வி கேட்காதீர்கள் என்று சொல்கிறார். செந்தில்பாலாஜிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் அல்லது 60 ஆயிரம் நாங்கள் கொடுக்கவேண்டும்,நாங்கள் எப்படி தர முடியும்,எனவே ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் செய்தால்தான் தர முடியும் என்று கடையில் உள்ள விற்பனையாளர்கள் சொல்வது சமூக ஊடகங்களில் வந்துகொண்டுதான் உள்ளது.இதனை மூடி மறைக்கும் வகையில் செந்தில்பாலாஜி சொல்கிறார் என்றால் இதனை மக்கள் யாராவது நம்புவார்களா.
அரசு கரூவூலத்திற்கு வரவேண்டிய பணம் செந்தில்பாலாஜி மூலம் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது என்றால்,உதாரணத்திற்கு சொல்கிறேன்.பார் லைசென்ஸ் இன்றைக்கு யாருக்கும் கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் தடை இருப்பதால் தரவில்லை.அப்படி என்றால் பார் நடத்தக்கூடாது அல்லவா. பார் எங்காவது நடக்காமல் உள்ளதா.தடுக்கி விழுந்தால் பார். சென்னையிலும் சரி,தமிழகத்திலும் சரி. எங்கள் ஆட்சி காலத்தில் பார் அனுமதித்தாலும் சில விதிமுறைகள் இருந்தது.பார் நடத்துபவர்கள் அங்கு வரும் பணத்தை டிடி எடுத்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு அளிக்கவேண்டும்.அந்த பணம் அரசுக்கு வந்துவிடும். ஆனால் தற்போது அந்த பணம் அரசு கருவூலத்திற்கு வருவதில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் செந்தில்பாலாஜி ஆட்கள் இருக்கிறார்கள். கடைகளில் கூடுதலாக வசூல் செய்யும் பணத்தை வாங்கிவிடுவார்கள்.அது ஒரு பக்கம் கரூர் கம்பெனிக்கு போய்கொண்டுள்ளது. அதன்பிறகு டாஸ்மார்க் பாரில் டிடி எடுக்காமல் ஒவ்வொரு கடைக்கும் ரூ.2 லட்சம்.இது மட்டும் மாதம் ரூ.40 கோடி ரூபாய். அரசுக்கு வரவேண்டிய ரூ.40 கோடி வருவாய் கரூர் நிறுவனத்திற்கு செல்கிறது என்றால் இதுபோன்ற அநியாயம் உலகத்தில் எங்காவது நடக்குமா.இப்போது கள்ளச்சாரயம் ஆறாக ஓடுகிறது.அப்படி என்றால் இதற்கு முன்னர் இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்.முன்னரே நடவடிக்கை எடுத்திருந்தால் 24 பேர் மரணமடையவேண்டிய அவசியம் இருந்திருக்காது.இன்னும் 8 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் கள்ளச்சாராய மரணங்கள்.நேற்றைக்கு செங்கல்பட்டில் டாஸ்மார்க் கடையில் சரக்கு வாங்கி சாப்பிட்ட இமானுவேல் என்ற வாலிபர் சுருண்டு விழுந்து செத்துவிட்டார்.அவர் டாஸ்மாக் சரக்கு மூலம் மரணமடையவில்லை என்று இவர்கள் அறிக்கை தரபோகிறார்கள்.38 வயது மதிக்கதக்கவர் சரக்கு வாங்கி சாப்பிட்டு சுருண்டு விழுந்து சாகிறார் என்றால் டாஸ்மாக் மீது சந்தேகபடவேண்டிய நிலை உள்ளதல்லவா.அப்படி என்றால் டாஸ்மாக்கிலும் இந்த அரசு கலப்பட விற்பனை செய்கிறதா.
இப்படி மக்கள் கேள்வி கேட்டுவருகிறார்கள்.இதற்கு பதில் சொல்லவேண்டியது அரசின் கடமை. தவறு யார் செய்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை.ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் 90 சதவீதம்பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுப்பட்டுள்ளார்கள். விருப்பு,வெறுப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஆனால் இவர்கள் செய்யமாட்டார்கள்.இதற்கு சுதந்திரமான,நியாமான நேர்மையான விசாரணை நடக்கவேண்டும் என்றால் ஒய்வுபெற்றுள்ள நீதிபதி தலைமையில் டாஸ்மார்க்கில் சுருண்டு விழுந்து எப்படி செத்தார் என்று கண்டுபிடிக்கவேண்டும், ஏற்கனவே மரணமடைந்தவர்கள்,ல்.
இதன் காரணமாக எத்தனை பேரை காவல்துறை பிடித்துள்ளது,இதற்கு முன்னர் எவ்வளவு நாட்கள் இதனை செய்துகொண்டிருந்தார்கள் என்று விசாரிக்கவேண்டும்.
தமிழக மின் துறை அமைச்சர் நிர்வாக ரீதியாக துறையை மேம்படுத்த நினைக்காமல், எப்படியெல்லாம் ஊழல் செய்வது என்பது குறித்து ரூம் போட்டு ஆலோசித்து, அவற்றை எப்படியெல்லாம் செயல்படுத்தலாம் என்பது குறித்து திட்டமிடுவதால் தான், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறார்.தமிழகத்தில் மின் துறையை கவனிக்க ஆள் இல்லாமல் ஆங்காங்கே மின்வெட்டு நிலவுகிறது.கழக ஆட்சியில் இருந்தபோது 24 மணி நேரமும் இடைவிடாமல் மின்விநியோகம் செய்யப்பட்டது. அரசு பணத்தை எப்படி எல்லாம் கையாடல் செய்ய முடியும் என்று நினைப்பவர்களால் எப்படி சிறப்பான நிர்வாகத்தை கொடுக்க முடியும்.
தமிழகத்தில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கண்டறிந்து அவர்களை குண்டாஸ் வழக்கில் கைது செய்திருந்தால் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் நிகழ்வு ஏற்பட்டிருக்காது. திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டில் தமிழகமே போதையில் தள்ளாடி வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்த திமுகஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை மாற்றி, எங்கும் பார் எங்கும் சரக்கு என தமிழகத்தையே திமுக அரசு மாற்றிவிட்டது.
தமிழக உளவுத்துறை அளிக்கும் பரிந்துரைகளை ஆளும் திமுக அரசு முறையாக நடவடிக்கை எடுக்காததால்தான் தற்போது தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு காரணம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *