• June 7, 2025

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மாணவி மோகனா ஸ்ரீ; 490 மதிப்பெண் பெற்றார்

 கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மாணவி மோகனா ஸ்ரீ; 490 மதிப்பெண் பெற்றார்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்துள்ளது.4வது இடத்தை  கன்னியாகுமரி மாவட்டமும்  – (95.99%) பெற்றுள்ளது. 5-வது இடத்தை  ● தூத்துக்குடி –மாவட்டமும்  (95.58%) பிடித்துள்ளன

கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் மாணவி மோகனாஸ்ரீ 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்,. இவர் கோவில்பட்டியை அடுத்த கோடாங்கிபட்டி  அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

மாணவி மோகனாஸ்ரீ பாடவாரியாக  பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ் -98

ஆங்கிலம் – 99

கணிதம் – 99

அறிவியல்- 96

சமூக அறிவியல் -98

மாணவி மோகனாஸ்ரீ தந்தை முத்துராஜ், தாய் காளீஸ்வரி இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற மாணவி மோகனா ஸ்ரீயை பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *