கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை ரத்து

கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த துணை மின்நிலையங்களில் இருந்து சப்ளைஆகும் கிராமங்களுக்கு 20-ந்தேதி சனிக்கிழமை காலை 8 ,மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திடீரென 20-ந்தேதியா மின்தடை ரத்து செய்யப்படுகிறது. வழக்கம் போல் அன்றைய தினம் மின்சப்ளை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ,கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,கோவில்பட்டி கோட்டத்தை சேர்ந்த கோவில்பட்டி,சிட்கோ, விஜயாபுரி , கழுகுமலை, துரைச்சாமி புரம் , எட்டயபுரம் , செட்டிகுறிச்சி எப்போதும் வென்றான், பசுவந்தனை, கடம்பூர் ,சன்னது புதுக்குடி துணை மின் நிலையங்களில் 20.5.23 அன்று காலை 8 மணி முதல் மாலை 5. மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக உச்தேசிக்கப் பட்டிருந்த மின் நிறுத்தம் ,நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட துணை மின் நிலையங்களில் 20/5/2023 அன்று வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும் .நுகர்வோர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
