பா.ஜ.க.எம்.பி.யை கைது செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பா.ஜ.க.எம்.பி.யும் மல்யுத்த கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூசன் சரண்சிங்கை பதவி நீக்கம் செய்து கைது செய்யக்கோரி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கட்சியின் தாலுகா, நகர் குழு மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் சரோஜா, பஞ்சாலை தொழிலாளர் சங்க மாமாவட்ட தலைவர் பரமராஜ், மாணவர் மன்ற தலைவர் கண்ணம்மா, உதவி துணை செயலளார் முனியசாமி , நகர குழு உறுப்பினர்கள் சண்முகவேல், ராஜி, ஐய்யப்பன், செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
