• June 8, 2025

சித்ரா பவுர்ணமி திருவிழா: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் குடகனாறு ஆற்றில் இறங்கி முனிவருக்கு சாப விமோசனம்

 சித்ரா பவுர்ணமி திருவிழா: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் குடகனாறு ஆற்றில் இறங்கி முனிவருக்கு சாப விமோசனம்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று வியாழக்கிழமை தொடங்கியது. மாலை 6 மணி அளவில் சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு பல்வேறு திருக்கண்களில் இறங்கி அருள் பாலித்து இரவு தாடிக்கொம்பு பகவதி அம்மன் கோவிலில் தங்கினார்.

இன்று  வெள்ளிக்கிழமை  காலை 5 மணி அளவில் பகவதி அம்மன் கோவிலில் இருந்து கிளம்பி பல்வேறு திருக் கண்களில் எழுந்தருளி காலை 7 மணி அளவில் குடகனாறு ஆற்றுக்குச் சென்றார். அங்கு தவளை வடிவில் உள்ள மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்து ஆத்துப் படித்துறை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

அங்கு நடைபெற்ற  சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பல்லாக்கில் எழுந்தருளி சுவாமி திண்டுக்கல் நோக்கி கிளம்பினார். வழிநெடுகிலும் பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள திருக்கண்களில் எழுந்தருளினார். அங்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்ட பின் திண்டுக்கல் வந்தடைந்தார். தொடர்ந்து நேற்று மாலை திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் எழுந்தருளி  பெருமாளின் எதிர்சேவை நடைபெறும். தொடர்ந்து கருப்பண்ணசாமி கோவிலில் இரவு சுவாமி தங்கினார்.

நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு அங்கிருந்து கிளம்பி தாடிக்கொம்பு ரோடு , நந்தவனம் ரோடு, சொசைட்டி தெரு, பென்சனர் தெரு, பழனி ரோடு ,மேற்கு ரத வீதி, கோவிந்தாபுரம் ,நாயக்கர் புது தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சவுந்தரராஜ பெருமாள் கிழக்கு ரத வீதியில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில் இரவு தங்குகிறார்.

நாளை மறுநாள் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் அபிராமி அம்மன் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் சௌந்தரராஜ பெருமாள் புறப்படுகின்றார். கிழக்கு ரத வீதி, நெட்டு தெரு, மேட்டுப்பட்டி, தெற்கு ரத வீதி, பெரிய கடைவீதி, மேற்கு ரத வீதி, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்களில் எழுந்தருளி சுவாமி அருள் பாலிக்கின்றார்.

தொடர்ந்து அன்று இரவு திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே மின் ரத சிறப்பு அலங்காரமும் தசாவதார காட்சியும் நடைபெறும்.

8-ந் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து புறப்படுகிறார். தொடர்ந்து மெயின் ரோடு சன்னதி தெரு நெட்டு தெரு பெரிய கடைவீதி காசு கடை சந்து வழியாக மேற்கு ரத வீதியை அடைகின்றார். தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி இரவு மாநகராட்சி அருகே உள்ள பேட்டையில் தங்குகிறார் அங்கு திரு அவதாரக் காட்சி நடைபெறும்.

9-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மேல் கள்ளழகர் வேடம் தரித்து நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பேட்டையில் இருந்து பூ பல்லக்கில் சுவாமி புறப்படுகின்றார் அங்கிருந்து மெயின் ரோடு மேற்கு ரத வீதி வழியாக பழனி ரோடு அதனை தொடர்ந்து தாடிக்கொம்பு ரோடு வருகின்றார். தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பால்சாமி ஐயர் மண்டகப்படியில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார் தொடர்ந்து அன்று இரவு அங்கு நகரத்தில் சுவாமி இரவு தங்குகிறார் அங்கு திருமஞ்சனம் மற்றும் ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும்.

 10-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு அங்கு நகரில் இருந்து கருட வாகனத்தில் புறப்பட்டு அன்று மாலை திருக்கோவில் திரும்புகின்றார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *