பசுவந்தனை கைலாசநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா நாளை தொடக்கம்

 பசுவந்தனை கைலாசநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா நாளை தொடக்கம்

கோவில்பட்டியை அடுத்த பசுவந்தனை ஆனந்தவல்லி அம்மாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோவில் கயத்தாறு மன்னராலும், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னராலும், அதனைத் தொடர்ந்து எட்டப்ப நாயக்க மன்னரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் ராஜராஜ சோழன் காலத்தில் இந்த கோவில் முழுமையாக கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும்.

இக்கோவிலில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழா நாளை  25-ந்தேதி காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 5-ந்தேதி வரை நடக்கும் விழா நாட்களில் தினமும் கட்டளைதாரர்கள் சார்பில் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கிறது.

விழாவின் 9-வது நாளான மே.2-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம், மே.4-ந்தேதி தீர்த்தவாரி , மே.5-ந்தேதி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், காலை 10மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டணப்பிரவேசம்  நடக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *