கோவில்பட்டி சத்யபாமா தியேட்டரில் கூடுதலாக 2 ஸ்கிரீன்கள் ; 23-ந்தேதி திறப்பு

கோவில்பட்டி நகரில் முத்திரை பதித்து வரும் சத்யபாமா தியேட்டர்ஸ் மக்களின் ஆதரவுடன் வெற்றி நடை போட்டு வருகிறது.
தற்போது 2 ஸ்கிரீன்கள் உள்ளன. கூடுதலாக 2 ஸ்கிரீன்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.தற்போது இந்த பணி நிறைவடைந்து விட்டது. நவீன ஒளி, ஒலி அமைப்புடன் ஆடம்பர இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து ஸ்க்ரீன் 3 மற்றும் ஸ்கிரீன் 4 திறப்பு விழா 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இது கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
