கோவில்பட்டியில் 6 நாட்கள் நடக்கும் புத்தக திருவிழா- கலைநிகழ்ச்சிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 21-ந் தேதிமுதல் மே 1 வரை புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா நடக்கிறது. இதையொட்டி கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தில் 21, 22, 23- ந்தேதி மற்றும் 28,29,30-ந் தேதிகளில் 6 நாட்கள் உள்ளூர் கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடத்துதல் மற்றும் புத்தக திருவிழா தொடர்பான விழிப்புனர் நிக்ளச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய அறிவுருத்தப்பட்ட படி நிகழ்ச்சிகள நடைபெற ஏற்பாடுகள் செய்வது தொடர்பான முனேற்பாடு ஆய்வு கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியரால் நடத்தப்பட்டது.
இன்ஹா கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,
புத்தக திருவிழாவிற்கு பார்வையாளர்களை ஏற்பாடு செய்தல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவட்டத்தில் இருந்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தல் போன்ற பணி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளருக்கு வழங்கக்ப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, புத்தகா திருவிழாந நடைபெறும் இடங்களில் பந்தல்கள் அமைப்பதை முழுமையாக கண்காணித்தல், அலங்கார செடிகள் அமைதல், செல்பி பாயிண்ட் அமைத்தல் , மின் இணைப்புகள் அமைத்தல், பராமரித்தல் போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டது.
இது போல் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் ஒவ்வொரு பணிகள் ஒதுக்கப்பட்டன,
