• June 7, 2025

கோவில்பட்டி அதிகாரிகளிடம் 3 கோரிக்கை மனுக்கள்; பா.ஜனதா கட்சியினர் வழங்கினர்

 கோவில்பட்டி அதிகாரிகளிடம் 3 கோரிக்கை மனுக்கள்; பா.ஜனதா கட்சியினர் வழங்கினர்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் 3 மனுக்கள் வழங்கப்பட்டன.

யூ.பி. மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் மலையின் மேல் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக ஒரு மனு வழங்கப்பட்டது. மற்றொன்று வட்டாட்சியர் அலுவலகத்தில், முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு விளக்கு எரிவதற்கு மின்சார வசதி இல்லாத காரணத்தினால் வட்டாட்சியரிடம் மின்சார சர்வீஸ் அமைtத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது

 மற்றொன்று இனாம் மணியாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு கங்கன்குளம் கிராமத்தில் வசித்து வரும் அருந்ததியர் வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் சர்வீஸ் லைன் ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது 

இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியில் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் கந்தசாமி தலைமையில் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஒன்றிய துணைத் தலைவர் ஜெகதீஷ் மற்றும் விவசாய அணி மாநில பொறுப்பாளர் சுரேஷ்குமார் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ஐயப்பன் கண்ணன் ராமகிருஷ்ணன் கிருஷ்ணசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *