• June 7, 2025

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் காய்கறி மார்க்கெட் நடத்த  தடையா? வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு

 கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் காய்கறி மார்க்கெட் நடத்த  தடையா? வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு

கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த நகராட்சி தினசரி மார்க்கெட்டை இடித்து விட்டு 250 கடைகள் கொண்ட புதிய மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது,

அதுவரை மாற்று இடமாக புதியபஸ் நிலையத்தில் மாற்று கடைகள் ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்து விட்டனர், மேலும் மார்க்கெட்டை இடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு  மத்தியில் திங்கட்கிழமை அன்று காலை மார்க்கெட் இடிப்பு பணி தொடங்கியது. இதை தொடர்ந்து காய்கரி, பழக்கடை மொத்த, சில்லறை வியாபாரிகள் தெற்கு திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பு பகுதியில் வியாபர்கள் சங்கத்துக்கு சொந்தாமான 10 ஏக்கர் இடத்தில் கடைகள் அமைக்க தொடங்கி விட்டனர்,

120 மொத்த கடைகளும், 120 சில்லறை கடைகளும் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது,’ இதில் முதல் கட்டமாக  5 ஏக்கரில் 40 மொத்த கடைகளும்  40 சில்லறை கடைகளும் அமைத்து நேற்று முதல்   வியாபாரம் செய்ய தொடங்கினார்கள் பொதுமக்களும் ஆர்வத்துடன் காய்கறி வாங்கி சென்றனர்,.

இந்த் நிலையில் திட்டங்குளம் ஊராட்சி பகுதியில் விவசாய பகுதியில் அழித்து வணிக வளாகம் அமைக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதையும் மீறி நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

இந்த நிலையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சார்பில் ஒரு அறிவிப்பு பேனர் புதிய மார்க்கெட் பகுதியில் வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 148 துணை பிரிவு (1) மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (சந்தை திறப்பு மற்றும் பராமரிப்பு) வேதிகள் 2000 இன் படியும் பஞ்சாயத்து மன்றம்/ ஊராட்சி ஒன்றிய மன்றத்தில் எவ்வித அனுமதிய மற்றும் உரிமம் பெறாமல் தனியார் சந்தை அமைப்பதற்கான நிபந்ததனைகளை மீறி நடைபெறும் தனியார் சந்தை செயல்படுவதற்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 150 இன்படி  தடை செய்யப்படுகிறது.

தனியார் சந்தை சட்டவிதிகளை மீறி செயல்பட்ட்டால் காவல்துறை மூலம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது,

மேற்கண்டவாறு அந்த பேனர் அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பினால் புதிய மார்க்கெட் வியாபாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன ஆகும் என்ற பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *