• June 7, 2025

கோவில்பட்டியில் த.மா.கா. சார்பில் பொங்கல் வைக்கும் கவன ஈர்ப்பு போராட்டம்; போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்

 கோவில்பட்டியில் த.மா.கா. சார்பில் பொங்கல் வைக்கும் கவன ஈர்ப்பு போராட்டம்; போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி சிதம்பராபுரம் ஆகியவை எட்டயபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்குள் உள்ளன. அதேபோல் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, விஸ்வநாததாஸ் நகர் ஆகிய பகுதிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு மிக அருகாமையில் உள்ளன.

இந்தப் பகுதிகள் அனைத்தும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன. இந்த கிராமப்புற பகுதிகளில் ஒரு பிரச்சனை என்றால் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இருந்துதான் போலீசார் செல்ல வேண்டும். இதற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆகிவிடுகிறது. அதேபோல் புகார் அளிக்க அங்குள்ள மக்கள் கோவில்பட்டியை கடந்து தான் நாலாட்டின்புதூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயண நேரம், பண விரயம் ஏற்பட்டு வருகிறது.. அதனால் நாலாட்டின்பதூர் காவல் நிலைய எல்லையை மாற்றியமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி, சிதம்பராபுரம், பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 30 கிராம மக்கள் பயன்பெறும் விதமாக கடலையூரை தலைமையிடமாகக் கொண்டு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற  கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மேற்படி கோரிக்கைகளை  அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று  (19ம்தேதி) கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் வைத்து 21 பானைகளில் பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும். என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவர் ராஜகோபால், அறிவித்து இருந்தார்,.

அதன்படி இன்று காலை நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் வட்டார தலைவர் ஆழ்வார்சாமி முன்னிலையில் கட்சியினர் சிலர் பொங்கல் வைப்பதற்குரிய  பொருட்கள், பாத்திரம், அடுப்பு எரிய வைப்பதற்கான குச்சிகளை சுமந்தபடி அரசு அலுவலகங்கள் வளாக பகுதிக்கு வந்தனர்.

த.மா.கா.நகர துணை தலைவர்கள் ராஜமாணிக்கம், சுப்புராஜ், துணை செயலாளர் ஜான்கென்னடி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் எஸ்.ஏ.கனி, பொதுசெயலாளர் பொன்னுசாமி, மாவட்ட துணை செயலார் காளை பாண்டி உள்பட பலர் அணிவகுத்து சென்றனர்.

அவர்கள் வருகையை அறிந்து முன்கூட்டியே அங்கு போலீசார் நிறுத்த்தபட்டு இருந்தனர். அவர்கள் த.மா.கா.வினரை தடுத்து நிறுத்தினார்கள். கவன ஈர்ப்பு போராட்ட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று கூறினர்.

இதனால் .த.மா.கா..வினர் கண்டன குரல் எழுப்பினார்கள். சிறிது நேரம் கழித்து அவர்களை போலீசார் அங்கிருந்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *