• June 8, 2025

கோவில்பட்டியில் தேரோட்டம்; பக்தர்கள் குவிந்தனர்

 கோவில்பட்டியில் தேரோட்டம்; பக்தர்கள் குவிந்தனர்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா  மிக முக்கிய திருவிழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கோவில்பட்டி நகரை களை கட்ட செய்து விடும்.]

ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர் சார்பில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. கோவில் மைதானத்தில் மக்களை கவரும் வகையில் விதவிதமான ராட்டினங்கள் அமைக்கபப்ட்டு உள்ளன,. சிறுவர்களை கவரும் விளையாட்டு பொருட்கள் முதல் பெரியவர்களை சுண்டி இழுக்கும் பல்வேறு பொருட்கள் வரை விற்கும் திடீர் கடைகள் நிறைய உருவாகி உள்ளன.

கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு இந்த திருவிழா பெருந்திருவிழா ஆகும். தினமும் மாலை வேளைகளில் மக்கள் கோவில் மற்றும் மைதானத்தில் திரண்டனர்.

விழாவின் 9-வது நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா  நடைபெற்றது, இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது,. 4.30 மணிக்கு திருவனந்தால் பூஜை, 6 மணிக்கு விழா பூஜை நடைபெற்றது,.

காலை 7.31 க்கு மேல்  7.50 க்குள் ரதாரோகணம் நடந்தது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று தேர்களுக்கு எழுந்தருளல் நடைபெற்றது.

பகதர்கள் 7 மணியில் இருந்தே வரத்தொடங்கி விட்டனர். காலை 9.15 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் தொடங்கியது. அந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அவர்கள் பக்தி கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

முதல் பூவனநாத சுவாமி எழுந்தருளிய தேர் புறப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர், அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய …ஓம் நமச்சிவாய… என்று பக்தி குரல் எழுப்பினார்கள்.

சுவாமி தேர் கோவில் முன்பிருந்து புறப்பட்டது. அதனுடன் பக்தர்கள் நடந்து சென்றனர்.  சிறிது நேரத்தில் செண்பகவல்லி அம்மன் எழுந்தருளிய  தேர் புறப்பட்டது, ஓம் சக்தி … பராசக்தி கோஷம் எழுப்பிய பக்தர்கள் தேருடன் நடந்து சென்றனர்.

இரண்டு  தேர்களும் எட்டயபுரம் சாலை,வழியாக கோவிலை சுற்றி வலம் வந்து பகல் 12.15 மணிக்கு சுவாமி தேர் நிலையை அடைந்தது. 12.30 மணிக்கு அம்மன் தேர் நிலையை அடைந்தது.

இரவு 7மணிக்கு யானை வாகனம், அன்ன வாகனத்தில் சுவாமி-அம்மன் வீதி உலா நடக்கிறது. மண்டகபடிதாரர் :வணிக வைசிய சங்கம்

நாளை (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சியும் சனிக்கிழமை தெப்ப திருவிழாவும் நடக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *