• June 7, 2025

கிராம தத்தெடுப்பு திட்டம் : கடலையூரில் நோய் கண்டறியும் மருத்துவ முகாம்

 கிராம தத்தெடுப்பு திட்டம் : கடலையூரில்  நோய் கண்டறியும் மருத்துவ முகாம்

இந்திய மருத்துவ சங்கம் கோவில்பட்டி கிளையின் சார்பாக கிராம தத்தெடுப்பு திட்டத்தின்மூலம் மக்களை நாடி மருத்துவர் சிறப்பு நோய் கண்டறியும் மருத்துவ முகாம் மற்றும் மகளிருக்காண மேம்பாடு வேலைவாய்ப்பு, கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் கடலையூரில் இன்று (9ந் தேதி )நடைபெற்றது.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இம்முகாமினை இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த தலைவர் டாக்டர் என்.டி. சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் கோவில்பட்டி கிளைச் செயலாளர் டாக்டர் எஸ்.

சிவநாராயணன் முகாம் குறித்த சிறப்பு அம்சங்களை விளக்கி பேசினார். சங்கத்தின் பொருளாளர் டாக்டர் .ஆர். பாலமுருகன் சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோய்களை ஆரம்ப காலத்தில் கண்டறிதல் பற்றிய முக்கியத்துவத்தையும் ,அதனால் ஏற்படும் இருதய பாதிப்புகளை தவிர்ப்பது பற்றியும் எடுத்துரைத்தார்.

சங்கத்தின் இணைச் செயலாளர் டாக்டர் . எஸ். தாமோதரன் மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களை கவுரவித்தார்.

மாவட்ட ஆவின் துணைத் தலைவர் பாலமுருகன் வரவேற்று பேசினார் ,ஊராட்சி மன்ற தலைவர் திராவிடசெல்வி வாழ்த்துரை வழங்கினார்,சமூக ஆர்வலர் மாரிச்சாமி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.

டாக்டர்கள் பத்மாவதி கோமதி, கமலா மாரியம்மாள், சுப்புலட்சுமி, செல்வராஜ், மகேஸ்வரி, சவுந்தர்ராஜன், ஆனந்த், கணேஷ், பத்ம பிரகாஷ், நர்மதாதேவி, கோகுல்பாலாஜி, ஸ்ரீதிவ்யா, ஆத்மிகா ,சஞ்சய், சரவணவித்யா, ராஜேஷ், ஆகியோர் கொண்ட மருத்துவநிபுணர் குழுவினர் முகாமில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களுக்கு விழிப்புணர்வையும் அளித்து சிகிச்சை அளித்தனர்.

இம்முகாமில் 350 பேர் பயன்பெற்றனர். இதில் 65 நபர்களுக்கு சர்க்கரை நோய் புதிதாக கண்டறிய

ப்பட்டது. 62நபர்களுக்கு ரத்த கொதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டது

12 நபர்களுக்கு கண் புரை கண்டறியப்பட்டது. 2 நபர்களுக்கு மார்பக கட்டிகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை கடலையூர் முத்துராஜ் செய்திருந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *