கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம்

கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்
. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், அழகுராஜ், சின்னத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். புது உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று 4ம்தேதி கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அனைத்து கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், தங்கசாமி, முருகன் மற்றும் சார்லஸ், காளிமுத்து, ராமமூர்த்தி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
