கோவில்பட்டி பள்ளிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.5 லட்சம் நன்கொடை

கோவில்பட்டி, வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு சொந்தமான ஈ. வே. அ. வள்ளிமுத்து தொடக்க பள்ளியின் புதிய கட்டிட நிதிக்காக ரூ. 5 லட்சம் நன்கொடையாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பாக கோவில்பட்டி கிளை மேலாளர் சுரேஷ் ஜெசுபாதம் வழங்கினார்.
அதனை பள்ளி செயலர் ஆர்.வி.எஸ். வேல் முருகேசன் பெற்றுக் கொண்டார். அப்பொழுது நாடார் மகாஜன சங்க துணைத் தலைவர் வி.என்.பி,.ஆர்,ஏ.பிரபாகரன், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் துரை , முன்னாள் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ,துணைத் தலைவர் அழகுவேல் என்ற சண்முகராஜ்,செயலாளர் வள்ளியப்பராஜ் ,கமிட்டி உறுப்பினர் சேர்முகச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
