மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
மகளிர் உரிமைத்தொகை குறித்து நீண்ட விளக்க்ம் கொடுக்க விரும்புகிறேன். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை குறித்த, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளிவரும் ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, சமூகத்திற்காகவும் எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்திருப்பார்கள்..? அவர்களுக்கான ஊதியம் தான் இது. இன்று பள்ளி, கல்லூரிகளில் அதிக மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கீகரித்தால் பெண்களுக்கான சமூக உரிமை வழங்கிடும் நிலை உருவாகும் என இந்த அரசு நம்புகிறது. குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இந்த திட்டம் யாருக்கெல்லாம் பயனளிக்கும் என்பது பொதுமக்களுக்கே தெரியும். * மீனவப்பெண்கள், சாலையோரம் கடை வைத்திருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
கட்டுமானப்பணியிலுள்ள மகளிர், சிறு கடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் மகளிருக்கு ரூ.1,000. * ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பணி செய்யும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். * ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. “
பெண்களுக்கான சமூக பொருளாதாரத்தை மீட்க எவ்வளவோ தலைவர்கள் வந்தாலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது” “கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது” பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள் இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
