• June 8, 2025

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை; அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும்

 சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை; அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும்

தமிழக பட்ஜெட் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்

தமிழ்நாடு சட்டசபை யில் இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் இன் றைய தினம் தொடங்கும் என சில வாரங்களுக்கு முன்பே சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதையடுத்து பட்ஜெட் தயாரிப்புப்பணிகளில் அரசு இறங்கியது. பொதுவாக ஒரே பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு பொதுபட்ஜெட் டும், விவசாயத்திற்கு என தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. முதலில் பொது பட்ஜெட் டும், மறுநாளில் வேளாண் பட்ஜெட்¬டும் தாக்கல் செய் யப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று காலை 10 மணியளவில் சட்டசபை கூட்டம் தொடங்கியவுடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.

இந்த பட்ஜெட்டில் பல்¬வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப் பிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு: –

மகளிருக்கு இலவச பயணம் சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை சரிநிகர் ச மமாக உயர திட்டமிட்டுச் செயல்பட் டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு. கல் வியில், நிர்வாகத்தில், அதி காரம் மிக்கபொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் தி.மு.க. அரசு அமையும் போதெல் லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

மகளிருக்குச் சொத்துரி மையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டண மில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரி மைக ளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல் பட்டு வருகிறோம்.

மகளிர் உரிமைத்தொகை அந்த வரி-சையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள்தேர்தல் அறிக் கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல் வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வரு கிறோம் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள். மக்களை தேடி மருத்து வம், புதுமைப்பெண், நான் முதல்வன் போன்றவைதேர் தல் அறிக்கையில் சொல்லப்படாதவை.

இத்தகைய புதுமை-யான திட்டங்களைசெயல்படுத்தி யுள்ள முதலமைச்சர், மகளி ருக்கு உரி-மைத்தொகை தரப்படு ம் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதி யாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறி வுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், த கு தி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலை-விகளுக்கு வரும் நிதி யாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கி றது என்பதைபெரும் மகிழ்ச் சியுடன் அறிவிக்கிறேன்.

ஒன்றிய அரசால் பெரும ளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதி கரிக்கும் குடும்பச் செலவு கள் போன்றவற்றால் பாதிக் க ப்ப ட் டு ள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என் பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவி யாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தி ட்டம் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்கசெப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைம கன் – பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15–ஆம் நாள் முதல் இத்திட் டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. ]

இத்திட்டத்தின் கீழ் மக ளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியி டப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ் வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற் காக, இந்த வரவு-செலவுத் திட்டத்-தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட் உரை யில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *