கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி பா.ஜ.க.சார்பில் மீண்டும் மனு

கோவில்பட்டி கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் ஈபி காலனி அடிப்படை வசதியான குறுக்கு தெரு சாலை வசதி வாறுகால் வசதி, காசி அம்மன் கோவில் முதல் பானு ஸ்டோர் வரையிலான வாறுகால் மற்றும் சாலை வசதி கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சமர்ப்பித்தும் இது நாள் வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.ஊராட்சி ஒன்றியமும் மந்த நிலையில் உள்ளது
இதனால் இன்று மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் பாலு தலைமையில் மாவட்டச் செயலாளர் ஊடகப்பிரிவு ராஜகாந்தன் கிழக்கு ஒன்றிய ஊடக பிரிவு தலைவர் குமார் ஆகியோருடன் ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து சென்று மனுவை வழங்கினார்
