இலவசவீட்டுமனை கோரி கோவில்பட்டி தாசில்தாரிடம் இந்திய கம்யூனிஸ்டு, கிராம மக்கள் மனு

இளையரசனேந்தல் பிர்க்காவில் பல வருடங்களாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு .இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை முறையிட்டும் தற்போது வரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் மனு வழங்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. இதனை அடுத்து தாசில்தாரிடம் கிராமமக்கள் மூலம் சுசிலாவிடம் மனுவை வழங்கினர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் இலவச மனை பட்டா வழங்குவதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் இப்பணி குறித்து துரித நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், விரைவில் மனு வழங்கப்பட்டவர்களில் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நகர செயலாளர் சரோஜா, நகர குழு உறுப்பினர்கள் குருசாமி, மற்றும் இன்னாசிமுத்து, உட்பட அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
