• June 7, 2025

கோவில்பட்டியில் மேலும் 2 பள்ளிகளில் காலை டிபன் வழங்கும் திட்டம்

 கோவில்பட்டியில் மேலும் 2 பள்ளிகளில் காலை டிபன் வழங்கும் திட்டம்

கோவில்பட்டியில் ஏற்கனவே பங்களாதெரு, காந்தி நகர், ஸ்டாலின் காலனி நகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இன்று முதல் மேலும் 2 நகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

இன்று முதல் கோவில்பட்டி புதுரோடு, பாரதி நகரில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி பள்ளிகளில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி குழந்தைகளுக்கு உணவு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ராஜாராம், நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *