ஜனாதிபதி முர்மு, முதல் முறையாக தமிழ்நாடு வருகை; மதுரை மீனாட்சி கோவிலில் சாமி கும்பிட்டார்

ஜனாதிபதி முர்மு பதவி ஏற்றபிறகு முதல் முறையாக இன்று தமிழ்நாடு வருகை புரிந்தார்.மதுரை கோவை ஆகிய இடங்களில் சுற்றுப் பயணம் செய்வதற்காக இன்று காலை 8. 4 5 மணி அளவில் தனி விமானத்தில் டெல்லி யில் இருந்து மதுரை புறப்பட்டார் அவரது விமானம் 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
அவரை கவர்னர் ஆர்.எ.ன் ரவி, அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் இந்திராணி மற்றும் மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் மற்றும் அதி காரிகள் வரவேற்றனர். வரவேற்பு முடிந்த பிறகு காரில் அவர் மீனாட்சி அம்மன் கோவி லுக்கு புறப்பட்டார். பெருங்குடி, அவனியா புரம் சுற்றுச்சாலை, வில் லாபுரம், தெற்கு வெளி வீதி, கீழவெளி வீதி, விளக்குத்தூண், வெண்க லக்கடைத்தெரு, கீழ சித் திரை வீதி வழியாக 12 மணி அளவில் கோவிலை சென்றடைந் தார். கோவில் வாசலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக் கப்பட்டது.

பின்னர் மீனாட்சியம்மன், சுந்த ரேஸ்வரர் சன்னதிகள் உட் பட அனைத்து சன்னதிக ளுக்கும் சென்று தரிசனம் செய்தார். பொற்றாமரை குளம், ஆயிரம் கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகு திகளை அவர் பார்வை யிட்டார். கோவிலின் சிறப்பு அம்சங்கள
குறித்து அவரிடம் அதி காரிகள் விளக்கி கூறினார் கள். மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடத் தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் ஜனாதிபதி முர்மு கோவி லில் இருந்தார்.
பிறகு அங்கிருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து அவர் கோவைக்கு சென் றார். இன்று மாலை கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத் திரி விழா நடக்கிறது. மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடக் கிறது. அங்கு ஆதியோகி சிலை மற்றும் தியான லிங்கத்தின் பஞ்சமுக ஆ ராதனை யுடன் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த விழாவுக்கு தலைமை விருந்தினராக ஜனாதிபதி முர்மு கலந்து கொள்கிறார். இரவு 9.30 மணி வரை விழாவில் பங்கேற்று விட்டு அங்கி ருந்து கார் மூலம் கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்குகிறார். நாளை (ஞா யி ற்றுக்கி ழ மை ) காலை கோவை விமான நிலை ய த் தி ற் கு காரில் செல்கிறார். அ ங் கி ருந் து ஹ ெ லி க ாப்டர் மூலம் குன்னூர் வெலிங் டன் ராணுவ மையத் திற்கு புறப்பட்டு செல்கி றார்.
அங்கு ராணுவ அதிகாரிகளுடன் கலந்து ரையாடுகிறார். போரில் உயிர் நீத்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகி றார். நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலை யம் வருகிறார். அங்கி ருந்து டெல்லிக்கு புறப் பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை யொட்டி மதுரை நகர் மற் றும் புறநகர் பகுதிகளில் 3500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீ னாட்சி ய ம்மன் கோவிலை சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் கோவையி லும் 5 ஆயிரத்திற்கு மேற் பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

