• June 7, 2025

ஜனாதிபதி முர்மு, முதல் முறையாக தமிழ்நாடு வருகை; மதுரை மீனாட்சி கோவிலில் சாமி கும்பிட்டார்

 ஜனாதிபதி முர்மு, முதல் முறையாக தமிழ்நாடு  வருகை; மதுரை மீனாட்சி கோவிலில் சாமி கும்பிட்டார்

ஜனா­திபதி முர்மு பதவி ஏற்றபிறகு முதல் முறையாக இன்று தமிழ்நாடு வருகை புரிந்தார்.மதுரை கோவை ஆகிய இடங்­க­ளில் சுற்றுப் பயணம் செய்­வ­தற்­காக இன்று காலை 8. 4 5 மணி அள­வில் தனி விமா­னத்தில் டெல்லி­ யில் இருந்து மதுரை புறப்­பட்­டார் அவரது விமா­னம் 11.45 மணிக்கு மதுரை விமான நிலை­யம் வந்­த­டைந்­தது.

அவரை கவர்­னர் ஆர்.எ.ன் ரவி, அமைச்­சர் மனோதங்கராஜ், மேயர் இந்திராணி மற்றும் மாவட்ட கலெக்­டர் அனீஸ் சேகர், போலீஸ் கமிஷ­னர் நரேந்திரன் நாயர், தென்­மண்­டல ஐ.ஜி. அஸ்­ரா­கார்க் மற்றும் அதி­ கா­ரி­கள் வர­வேற்­றனர். வர­வேற்பு முடிந்த பிறகு காரில் அவர் மீனாட்சி அம்­மன் கோவி­ லுக்கு புறப்­பட்­டார். பெருங்குடி, அவனியா புரம் சுற்றுச்­சாலை, வில்­ லா­புரம், தெற்கு வெளி­ வீதி, கீழ­வெளி வீதி, விளக்குத்தூண், வெண்­க லக்­க­டைத்­தெரு, கீழ சித்­ திரை வீதி வழியாக 12 மணி அள­வில் கோவிலை சென்­ற­டைந்­ தார். கோவில் வாசலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்­ கப்­பட்­டது.

பின்­னர் மீனாட்­சியம்­மன், சுந்­த ரேஸ்­வ­ரர் சன்­ன­தி­கள் உட் பட அனைத்து சன்­ன­தி­க ளுக்கும் சென்று தரிச­னம் செய்­தார். பொற்­றா­மரை குளம், ஆயிரம் கால் மண்­ட­பம் உள்ளிட்ட பல்­வேறு பகு­ தி­களை அவர் பார்­வை யிட்­டார். கோவிலின் சிறப்பு அம்­சங்­கள

குறித்து அவரி­டம் அதி­ கா­ரிகள் விளக்கி கூறி­னார் கள். மீனாட்சி அம்­மன், சுந்­த­ரேஸ்­வ­ரர் சாமிக்கு சிறப்பு பூஜை­களும் நடத்­ தப்­பட்­டன. சுமார் ஒரு மணி நேரம் ஜனா­தி­பதி முர்மு கோவி­ லில் இருந்­தார்.

பிறகு அங்கிருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்­பட்­டார். விமான நிலையத்தில் இருந்து அவர் கோவைக்கு சென்­ றார். இன்று மாலை கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்­ திரி விழா நடக்­கி­றது. மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடக் கி­றது. அங்கு ஆதி­யோகி சிலை மற்­றும் தியான லிங்­கத்தின் பஞ்­ச­முக ஆ ரா­த­னை யு­டன் நிகழ்ச்சி நடக்­கி­றது.

மகளுடன் ஜனாதிபதி முர்மு

இந்த விழா­வுக்கு தலைமை விருந்­தி­ன­ராக ஜனா­தி­பதி முர்மு கலந்து கொள்கி­றார். இரவு 9.30 மணி வரை விழா­வில் பங்­கேற்று விட்டு அங்கி­ ருந்து கார் மூலம் கோவை ரேஸ் கோர்­ஸில் உள்ள விருந்­தி­னர் மாளி­கைக்கு வந்து தங்குகி­றார். நாளை (ஞா யி ற்­றுக்­கி ழ மை ) காலை கோவை விமான நிலை ய த் தி ற் கு காரில் செல்கி­றார். அ ங் கி ருந் து ஹ ெ லி க ாப்­டர் மூலம் குன்னூர் வெலிங்­ டன் ராணுவ மையத்­ திற்கு புறப்­பட்டு செல்கி­ றார்.

அங்கு ராணுவ அதிகா­ரிகளு­டன் கலந்­து­ ரை­யா­டுகி­றார். போரில் உயிர் நீத்­தவர்­க­ளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகி­ றார். நிகழ்ச்சி முடிந்­ததும் ஹெலிகாப்­டர் மூலம் கோவை விமான நிலை­ யம் வருகி­றார். அங்கி­ ருந்து டெல்லிக்கு புறப்­ பட்டு செல்கி­றார்.

ஜனா­தி­பதி வரு­கை­யை யொட்டி மதுரை நகர் மற் றும் புற­நகர் பகுதிகளில் 3500 க்கும் மேற்­பட்ட போலீ­சார் பாதுகாப்பு பணியில் ஈடு­பட்­ட­னர். மீ னாட்­சி ய ம்­மன் கோவிலை சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்­பட்­டிருந்­தது. இதே­போல் கோவை­யி­ லும் 5 ஆயிரத்திற்கு மேற் பட்ட போலீ­சார் பாது­ காப்பு பணியில் ஈடு­ப­டுகி­றார்­கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *