ஈரோடு கிழக்கு தொகுதியில் தினமும் தி.மு.க.வினரின் விதிமீறல்கள்; தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் டி.ஜெயக்குமார் புகார்
![ஈரோடு கிழக்கு தொகுதியில் தினமும் தி.மு.க.வினரின் விதிமீறல்கள்; தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் டி.ஜெயக்குமார் புகார்](https://tn96news.com/wp-content/uploads/2023/02/329588060_1494228137771152_5778123435167612294_n-850x560.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய் வதாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் புகார் மனு கொடுத்துள்ளார். இது வரை தி.மு.க. சார்பில் ரூ.35.64 கோடியை செலவழித்துள்ளதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு த�ொகுதி இடைத்தேர்தல்வருகிற27– ஆம் தேதிநடைபெறுகிறது. ஏற்கனவே ஒருமுறை இந்த தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட் டது.
போலி வாக்காளர் களை அதிகம் சேர்த்துள்ள தாக வும் , அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்என் றும் கூறி தமிழக தலைமை தேர்தல்அதிகாரிசத்ய பிரதா சாகு வி டம் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் தலைமை தேர்தல் அதிகாரியை சந் தித்து புகார் மனு கொடுத் தார். தேர்தல் விதிகளை தி. மு.க. மீறி வருவதாகவும், நேர்மையாகவும்,ஜனநாயக முறையிலும் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தலைமை தேர்தல் அதிகா ரியை கேட்டுக்கொண்டார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. திருமங்கலம் பார்முலா போல ஈரோடு கிழக்கு தொகுதிக்கு புது பார்முலாவை தி.மு.க. உருவாக்கி இருக்கிறது. அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களை செல்ல விடாமல் ஆங்காங்கே சாமி யான பந்தல்,சேர் போட்டு தினசரி ஆயிரம் ரூபாய் கூலி கொடுத்து மூன்று வேளை பிரியாணி போட்டு அவர்களை அமரவைத்து விடுகின்றனர். இதனால் அ. தி.மு.க.கூட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் கூட்டத்தை தடுக்க சதி வேலை நடைபெ றுகிறது.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-2-1024x443.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் இந்த காலக்கட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்டை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருக் கும் எஸ்.பி.களை அழைத்து ஆலோசனை நடத்துவது தார்மீக அடிப்படையில் தவறு. ஈரோடு மாவட்டத்தை சுற் றியுள்ள மற்ற மாவட்டங்க ளில் இருந்து கள்ளஓட்டு போட ஆள் இறக்குவது, வாக்காளர்களுக்கு விநியோ கிக்க பணம் சப்ளை செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு தி.மு.க.வினர் செல்வார்கள். அவர்களுக்கு எந்த இடையூ றும் செய்யக்கூடாது என அறி வுறுத்தவே இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
ஆளும் கட்சியை சேர்ந்த வர்கள் தி.மு.க. கொடி யோடு பிரசாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் படத்தை அச்ச டித்து துண்டு பிரசுரமாக விநி யோகித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இப்படி பல் வேறு விதிமுறைகளில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வரு கிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி யில் பஜ்ஜி சுட்டாலும், வடை சுட்டாலும் தி.மு.க. ஜெயிக்காது. மக்கள் மவுனப் புரட்சி நடத்த உள்ளனர். இந்த விடியா அரசுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக் கள் பாடம் புகட்டுவார்கள். தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், வாரியத் தலைவர்கள் என 500–க்கும் மேற்பட்டவர்கள் எந்தவித வாகன அனுமதியும்பெறா ம ல் தேர்த ல் விதிமுறைகளுக்கு எதிராக தங்கள் வாகனங்களில் கொடி மற்றும் கட்சி சின்னங் களை பயன்படுத்தி வருகி றார்கள்.
ேலும் இவர்களில் பலர் அரசு முத்திரையுடன் கூடிய வாகனங்களை பயன் படுத்தியும் வருகின்றனர். இது தேர்த ல் விதிமுறைகளுக்கு புறம்பா னது. தேர்தல் அலுவலகங் கள் அமைக்க தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் உரிய அனுமதியைபெறவில்லை. தி.மு.க. கூட்டணி சார் பில் இதுவரை ரூ.35.64 கோடி செலவு செய்துள்ள னர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/a05531d4-4904-40e4-865b-cd3fdddfe1ca-1024x682.jpg)
110 செட்டுகள் போட் டுள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு செட்டின் வாடகை ரூ.5 ஆயிரம் ஆகும். மொத்தம் 110 செட்டுகளுக்கு 5 லட் சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒரு நாள் வாடகையாகும். கடந்த 8–ஆம் தேதி முதல் 13–ஆம் தேதி வரை 6 நாட்கள் செட் டுகளுக்கான வாடகை ரூ.33 லட்சம் ஆகும். இந்தசெட்டு களில் தலா 400 சேர் போட் டுள்ளனர். ஒரு சேருக்கு நாள் வாடகையாக ரூ.25 வசூலிக் கப்படுகிறது. 110 செட்டுகளுக்கு 8–ஆம் தேதி முதல் 13–ஆம் தேதி வரை ரூ.66 லட்சம் வாடகையாகும். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் செட் அமைத் தது பிளாஸ்டிக் நாற்காலி களை வாடகைக்கு எடுத்தது மட்டும் ரூ.99 லட்சம் வரை இதுவரை செலவழித் துள்ளார். செட்டுகளில் ஆட்களை அடைத்துவைத்து அசைவ பிரியாணி கொடுத்த வகை யில் ரூ.3 கோடியே 96 லட் சம் செலவழித்துள்ளார். இது போ க சி ற்று ண் டி , பணப்பட்டுவாடா என்ற வகையிலும் சேர்த்து மொத்தம் ரூ.35 கோடியே 64 லட்சம்செலவி டப்பட்டுள்ளது.
தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயக முறை யிலும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இல்லை என் றால் நீதிமன்றத்தை நாடு வோம். தமிழ்நாட்டில் சட் டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நீதிமன்ற வளாகம் அருகி லேயேகொலை நடக்கிறது. ஒரே நாளில் 9 கொலைகள் நடந்துள்ளன. ஏ.டி.எம். கொள்ளையும் நடந்துள் ளது. தமிழ்நாடு கொலை, கொள்ளைமாநிலமாக மாறிவிட்டது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-8-1024x768.jpg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)