கடையம் பகுதி கல்குவாரிகளில் இருந்து கனிமவள பொருட்கள் கேரளா கடத்தப்படுவதை தடுக்க சாலையில் பள்ளம் தோண்டிய மக்கள்

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இந்த குவாரிகள் மூலம் 10 வீல் முதல் 20 வீல் டாரஸ் லாரிகள் வரையில் பாறைகளை வெட்டி எடுத்து டாரஸ் லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர்.
மேலும் இவ்வகையான லாரிகள் ஆலங்குளம் முதல் கடையம் வரை உள்ள பிரதான சாலையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த லாரிகள் அதிக எடை உள்ள கனிம வளங்களை எடுத்து வருவதால் கீழ கடையம் ரெயில்வே சாலை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது இதனால் பள்ளி குழந்தைகள் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்தனர்
மேலும் இப்பகுதிகளில் உள்ள கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மிகப் பெரிய பாதிப்பு அடைந்தது.
இது சம்பந்தமாக கடையம் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக குவாரியை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றியும், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் வைத்தும், உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லாத காரணத்தினால் இன்று கீழ கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் திடீர் போராட்டத்தில் இறங்கினார்.’
பொதுமக்கள் உதவியுடன் ஜேசிபி மூலம் கீழ கடையம் ரெயில்வே சாலையில் ஐந்து அடி தூரம் பள்ளம் தோண்டி கனிம வளங்களை கொண்டு வரும் டாரஸ் லாரிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாதவாறு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
